பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, June 9, 2015
'முழுநேர ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்'
பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய காலத்தில் சம்பளம் வழங்கவும், பகுதிநேர ஆசிரியர் நிலையை, முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று, காஞ்சிபுரம் சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 'பகுதிநேர ஆசிரியர்கள் என்ற நிலையை மாற்றி, பணி நிரந்தரம் செய்து, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட, நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment