பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Monday, August 31, 2015
தமிழக அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழக அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. திங்கட்கிழமை (31.08.2015) அன்று 1.00 மணீயளவில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க தலைவர் திரு.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். இப்பேரணியில் சுமார் 600 க்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இப்பேரணியானது வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித போட்டி தேர்விற்கும் இடமளிக்காமல் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். அதை நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே மாண்புமிகு.தமிழக முதல்வர். அம்மா அவர்கள் அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பகுதிநேர ஆசிரியர்கள் தனித்தனியாக கையொப்பமிட்டு தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு FAX வாயிலாக அனுப்பி வைத்தனர். இப்பேரணியின் இறுதியில் சேலம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.கணேசன் மற்றும் அனைத்து சேலம் மாவட்ட மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இப்பேரணியில் கலந்து கோண்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
ReplyDeleteமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
ReplyDelete