பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Thursday, September 24, 2015
Monday, August 31, 2015
தமிழக அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழக அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. திங்கட்கிழமை (31.08.2015) அன்று 1.00 மணீயளவில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க தலைவர் திரு.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். இப்பேரணியில் சுமார் 600 க்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இப்பேரணியானது வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித போட்டி தேர்விற்கும் இடமளிக்காமல் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். அதை நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே மாண்புமிகு.தமிழக முதல்வர். அம்மா அவர்கள் அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பகுதிநேர ஆசிரியர்கள் தனித்தனியாக கையொப்பமிட்டு தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு FAX வாயிலாக அனுப்பி வைத்தனர். இப்பேரணியின் இறுதியில் சேலம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.கணேசன் மற்றும் அனைத்து சேலம் மாவட்ட மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இப்பேரணியில் கலந்து கோண்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
Sunday, August 23, 2015
சேலம் மாவட்ட அளவிலான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை (23.08.2015) அன்று சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் சேலம் வாசுவி சுபிக்ஷா ஹாலில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் திரு.முருகதாஸ் அவர்களும், மாநில செயலாளர் திரு.ஜெகதீஸ் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கல்ந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் திரு.கே.பெரியசாமி தலைமை தாங்கினார்.
இதில் கீழ்கண்ட தகவல்கள் ஆலோசிக்கப்பட்டது.1) தமிழகத்தில் பணிபுரியும் 16,459 பகுதிநேர ஆசிரியர்களிஉன் மாத ஊதியம் ரூ.5000 -இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் 6 மாத நிலுவைத் தொகையான ரூ.12000 வழங்கியதற்கும் சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 2)பகுதிநேர ஆசிரியர்களை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர ஆசிரியர்களாக பணி அமர்த்த எங்களின் வாழ்வு சிறக்க தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 3) மேலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெறும் விண்ணப்பத்தில் விருப்ப பணி இடங்கள் மூன்று கொடுக்கப்பட்டிருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு இடத்திற்கு மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் உதவியுடன் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட பொருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 4) பணிநிரவலை தொடர்ந்து பணிமாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 5)பணிநிரந்தரம் பெறும் தருவாயில் நாம் இருக்கிறோம் இதற்கு உறுதுனையாக இருந்த அனைத்து மாநில , மாவட்ட பொருப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. 6) நமது சங்கத்தை சரியான பாதையில் வழி நடத்தி கொண்டிருக்கும் நமது மாநில தலைவர்.திரு.சோலை.எம்.ராஜா அவ்ர்களுக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக்கொள்ளப்பட்டது.
-இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சேலம் மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்களுக்கும், அனைத்து இருபால் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதில் கீழ்கண்ட தகவல்கள் ஆலோசிக்கப்பட்டது.
-இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சேலம் மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்களுக்கும், அனைத்து இருபால் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Thursday, August 20, 2015
Tuesday, June 23, 2015
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
சேலம் (ஜுன் 26 2015):
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு:
இச்சந்திப்பின் பலனாக கீழ்கண்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
1) பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பாக ஜூன் 26 2015 முதல் ஜூலை 7 2015 வரை WORKSHOP நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள காலிபணியிடம் மற்றும் உபரி பணியிடங்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு அனவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவருக்கு அனுப்பப்படும்.
2) அதன் பிறகு SSA திட்ட அலுவலரிடமிருந்து பணிநிரவல் மற்றும் கலந்தாய்விற்கான திட்டம் வகுக்கப்பட்டு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- இச்சந்திப்பில் சேலம் மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.ஜி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sunday, June 21, 2015
சென்னையில் 20.06.2015 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிப்பு
சென்னையில் 20.06.2015 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தனர். சிறப்பு நிகழ்வாக அம்மா அவர்களின் போயஸ்கார்டனில் முதல்வரின் பாதுகாப்பு எல்லை வரை நமது மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரிய மாநில பொறுப்பாளர்கள் சென்றிருந்தனர். இருவருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப் பட்டது. இல்லத்திற்குள் சென்று அங்கே முதல்வரின் முதன்மை சிறப்பு தனி உதவியாளர் (PA) அவர்களிடம் நமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சேர்மன் திரு. சோலை M ராஜா மற்றும் உடற்கல்வித் துறையைச் சேர்ந்த மாநில செய்தி தொடர்பாளர் திரு.ராஜா சுரேஷ் ஆகிய மாநில பொறுப்பாளர்கள் வழங்கினர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர், இக்கோரிக்கை மனுவை நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜுலை முதல் வாரத்தில் நடைபெறும் சட்டமன்ற தொடரில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
Subscribe to:
Comments (Atom)